

சென்னை: பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மறுநாள் 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் வருகிறது.
அதனால், ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை.
இந்நிலையில், பொங்கலுக்கு முந்தைய நாளான ஜன.14-ம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுவதால், அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அன்று விடுமுறை அளித்தால், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜன. 14-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.