பிளஸ் 2 விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீட்டில் சிக்கல் இல்லை: சிபிஎஸ்இ விளக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீட்டில் சிக்கல் இல்லை: சிபிஎஸ்இ விளக்கம்
Updated on
1 min read

சென்னை: பிளஸ் 2 விடைத்​தாள் டிஜிட்​டல் மதிப்​பீட்டு பணி​கள் தொடர்​பாக வெளி​யான தகவல்​கள் அனைத்​தும் தவறானவை என்று சிபிஎஸ்இ விளக்​கம் அளித்​துள்​ளது.

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​பு​களுக்கு ஆண்​டு​தோறும் பொதுத் தேர்​வு​கள் நடத்​தப்​படு​கிறது. அதன்​படி நடப்​பாண்டு 12-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு கடந்த பிப்​ர​வரி 17-ல் தொடங்கி ஏப்​ரல் 10-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது.

இந்த பொதுத்​தேர்வு விடைத்​தாள்​கள் முதன்​முறை​யாக டிஜிட்​டல் முறை​யின் மூலம் மதிப்​பீடு செய்​யப்​பட்டு வரு​கின்​றன. விரை​வில் தேர்வு முடிவு​கள் வெளி​யாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில் சிபிஎஸ்இ டிஜிட்​டல் மதிப்​பிடும் முறை​யில் கோளாறுகள் இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகின. இதற்கு சிபிஎஸ்இ தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ஷன்​யம் பரத்​வாஜ் மறுப்பு தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் கூறிய​தாவது: புதி​தாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள விடைத்​தாள்​கள் மதிப்​பிடும் முறை​யில் தொழில்​நுட்ப சிக்​கல்​கள் இருப்​ப​தாக வரும் செய்தி தவறானது. டிஜிட்​டல் முறை மூலம் மதிப்​பிடும் பணி​கள் சீராக​வும், இதற்கு முந்​தைய ஆண்​டு​களை​விட சிறப்​பாக​வும் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த மதிப்​பிடும் முறையை செயல்​படுத்​தி​யதற்​காக சிபிஎஸ்இ வாரி​யம் பெருமை கொள்​கிறது. இதுதொடர்​பாக வெளி​யான தகவல்​கள் அனைத்​தும் தவறானவை. எனவே திட்​ட​மிட்ட கால அட்​ட​வணைப்​படி மதிப்​பிடும் பணி​கள் முடிவடை​யும். ஏற்​கெனவே அறி​வித்​த​படி மே 3-வது வாரத்​தில் தேர்வு முடிவு​களை எதிர்​பார்க்​கலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பிளஸ் 2 விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீட்டில் சிக்கல் இல்லை: சிபிஎஸ்இ விளக்கம்
திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in