நாட்டின் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள்: என்சிஇஆர்டி 8-ம் வகுப்பில் பாடமாக சேர்ப்பு

நாட்டின் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள்: என்சிஇஆர்டி 8-ம் வகுப்பில் பாடமாக சேர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சில் (என்​சிஇஆர்டி), அண்​மை​யில் வெளி​யிட்​டுள்ள 8ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில் நீதித்​துறை குறித்த பாட​மும் இடம்பெற்​றுள்​ளது.

இந்​தப் பாடத்​தில் நாட்​டின் நீதித்​துறை எதிர்​கொள்​ளும் முக்​கிய சவால்​கள் குறித்த விவரங்​கள் இடம்​பெற்​றுள்​ளன. நீதித் ​துறை​யில் ஊழல், அதிக வழக்​கு​கள் தேக்​கம் அடைதல், நீதிப​தி​கள் பற்றாக்​குறை உள்​ளிட்ட விவரங்​களும் இடம்​பெற்​றுள்​ளன. இதற்கு முன் வந்த பாடப் ​புத்​தகங்​களில் முதன்​மை​யாக நீதிமன்றங்​களின் அமைப்​பு, செயல்​பாடு​கள் மற்​றும் அவற்​றின் பங்கு குறித்த விவரங்​கள் இடம்​பெற்​றிருந்​தன.

ஆனால் தற்​போது இடம்​பெற்​றுள்ள பாடத்​தில், நீதித்​துறை அமைப்​புக்​குள் உள்ள ஊழலை​யும், குறிப்​பாக பொருளா​தார ரீதியாக நலிவடைந்த பிரி​வினருக்கு நீதி கிடைப்​ப​தில் அதன் தாக்கம் குறித்​தும் விவா​திக்​கிறது. அதில், உச்ச நீதி​மன்​றத்​தில் மட்​டும் 81 ஆயிரம் வழக்​கு​கள் தேங்கியிருப்​ப​தாக​வும், உயர் நீதிமன்​றங்​களில் 62.40 லட்​சம் வழக்கு​கள் நிலு​வை​யில் இருப்பதாக​வும், மாவட்​டம் மற்​றும் சார்பு நீதி​மன்​றங்​களில் மொத்தம் 4.70 கோடி வழக்​கு​கள் தேங்கி இருப்பதாக​வும் சுட்டிக்காட்​டப்​பட்​டுள்​ளது.

மேலும், இந்​தப் பாடத்​தில் நீதித்​துறை​யின் பல்​வேறு மட்​டங்​களில் மக்​கள் ஊழலை எதிர்​கொள்ள வேண்​டி​யுள்​ளது. ஏழைகள் மற்​றும் சமூகத்​தில் பின்​தங்​கிய​வர்​களுக்​கு, இது நீதியை அணுகு​வ​தில் உள்ள சிக்​கலை மோச​மாக்கி வரு​கிறது.

எனவே, தொழில் ​நுட்பத்தைப் பயன்​படுத்​து​வதன் மூலம் நீதித்​துறை அமைப்​பில் நம்​பிக்​கையை வளர்க்​க​வும் வெளிப்​ படைத்​தன்​மையை அதிகரிக்​க​வும், ஊழல் சம்​பவங்​கள் எங்கு எழுந்​தா​லும் அவற்றை எதிர்த்து விரை​வான மற்​றும் தீர்க்​க​மான நடவடிக்கை எடுக்​க​வும் மாநில மற்​றும் யூனியன் பிரதேச நிலை​யில் தொடர்ந்து முயற்சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக​வும் என்​சிஇஆர்டி பாடத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அது​மட்​டுமல்​லாமல், உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிப​தி​யாக இருந்த பி.ஆர்.கவாய் 2025-ல் பேசிய விஷய​மும் இந்த பாடத்​தில் இடம்​பெற்​றுள்​ளது. அவர், நீதித்​துறை அமைப்​பின் மீதான பொது​ மக்​களின் நம்​பிக்​கை​யில் தவறான நடத்தை மற்​றும் ஊழலின் தாக்​கம் குறித்​துப் பேசி​யது இந்​தப் பாடப்​புத்​தகத்​தில் இடம்பெற்றுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

நாட்டின் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள்: என்சிஇஆர்டி 8-ம் வகுப்பில் பாடமாக சேர்ப்பு
தனித்து விடப்பட்ட தவெக: அதீத நம்பிக்கையில் இருக்கிறாரா விஜய்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in