Published : 20 May 2023 06:13 AM
Last Updated : 20 May 2023 06:13 AM

அரசு கலை கல்லூரி மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன.

இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 8-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. சுமார் 2.8 லட்சம் மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்திருந்தனர். எனினும், அதில் பெரும்பாலான மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவர்கள் நலன்கருதி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் மே 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x