Published : 23 Mar 2023 06:07 AM
Last Updated : 23 Mar 2023 06:07 AM

குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக உயர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர் ஆகிய பதவிகளில் 7,138 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த 24.7.2022 அன்று ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 18லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

இந்நிலையில், குருப்-4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7,138-லிருந்து 10,117 - ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பதவிகள் வாரியாக உயர்த்தப்பட்ட காலி இடங்களின் எண்ணிக்கை விவரம்: (பழையகாலியிடங்களின் எண் ணிக்கை அடைப்புக்குறிக்குள்)

1. கிராம நிர்வாக அலுவலர் - 425 (274).

2. இளநிலை உதவியாளர் மற்றும் பில் கலெக்டர் - 4,952 (3,731).

3. தட்டச்சர் - 3,311 (2,108).

4. சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) - 1,176 (1,024).

மேலும் சில பொதுத்துறை நிறுவனங்களில் தட்டச்சர், இளநிலைஉதவியாளர் உள்ளிட்ட பதவிகளிலும் புதிய காலிப்பணியிடங்கள் வரப்பெற்றுள்ளன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 7,138-லிருந்து 10,117-ஆக அதிகரிக்கப் பட்டுள்ளதால், குருப்-4 தேர்வுக் கான கட்-ஆஃப் மதிப்பெண் சற்று குறைய வாய்ப்புள்ளதாக போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x