Published : 31 May 2022 05:00 AM
Last Updated : 31 May 2022 05:00 AM

கர்னாடக இசை வாய்ப்பாட்டு படிப்பில் மாணவர் சேர்க்கை: சென்னை மியூசிக் அகாடமி அறிவிப்பு

சென்னை: கர்னாடக இசை வாய்ப்பாட்டு அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக சென்னை மியூசிக் அகாடமி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மியூசிக் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மியூசிக் அகாடமியில் கர்னாடக இசை வாய்ப்பாட்டில் அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. இதில் 2022-23 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. 3 ஆண்டு காலம் கொண்ட இப்படிப்பு ஆண்டுக்கு 2 செமஸ்டர்களை (ஜுலை-நவம்பர் மற்றும் ஜனவரி-ஜுன்) உள்ளடக்கியது. இதற்கான வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8 மணி முதல்பகல் 12.30 மணி வரை நடக்கும்.

இந்த டிப்ளமோ படிப்பில், பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வர்ணம், கீர்த்தனை பாடத் தெரிந்திருக்க வேண்டும். இதில் சேர விரும்புவோர் சுய விவரத்துடன் கூடிய விண்ணப்பத்தை music@musicacademymadras.com என்ற மின்னஞ்சலுக்கு ஜுன் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அந்த மின்னஞ்சல் காப்பி ritharajan@gmail.com மற்றும் soomty@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படுவோருக்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னைராயப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சென்னை மியூசிக் அகாடமியை 044-28112231, 28115162 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x