Published : 30 May 2024 06:06 AM
Last Updated : 30 May 2024 06:06 AM

குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கு 90 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி இளநிலை பட்டப் படிப்பு ஆகும்.

முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கடந்த மே 22-ம் தேதி தொடங்கப்பட்டது. இப்பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை நடத்தப்பட்டு வருகின்றன.

பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x