Published : 22 Mar 2024 05:39 AM
Last Updated : 22 Mar 2024 05:39 AM

1 முதல் 9-ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு ஏப்.2-ம் தேதி தொடங்குகிறது: ஏப்.13 முதல் கோடை விடுமுறை

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப். 19-ம் தேதிநடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி,புதிய தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம்தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும்.

இதற்கிடையே, தேர்தல் பணிகள் மற்றும் அதற்கான பயிற்சிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல், வரும் 2024-25 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகளை ஆசிரியர்கள் ஏப்ரல் 23 முதல் 26-ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும்.

நடப்பு கல்வி ஆண்டுக்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 26 ஆகும். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x