ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஐஐடி, என்ஐடி போன்ற இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவாக நடக்கும்.

முதன்மைத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தி வருகிறது. அதன்படி, 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பிக்கும் காலஅவகாசம் டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் டிசம்பர் 6 முதல் 8-ம் தேதி வரை மேற்கொள்ளலாம்.

இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருப்பின் 011-40759000/69227700 என்ற எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மாணவர்கள் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in