Published : 25 Sep 2023 05:13 PM
Last Updated : 25 Sep 2023 05:13 PM

தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டிக்கு மதுரை பள்ளி மாணவி தேர்வு

தேசிய அளவிலான கால்பந்தாட்டப் போட்டிக்கு தேர்வாகியுள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி ஆர்.கோதைநாயகியை பள்ளி செயலர் என்.என்.ராஜேந்திரன் பாராட்டினார்.

மதுரை: தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டிக்கு மதுரை ஸ்ரீராம் நல்லமணி யாதவா பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி ஆர்.கோதைநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பள்ளிக் குழுமம் நடத்தும் கால்பந்தாட்ட தெரிவுப் போட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 19 வயது பிரிவு மாணவிகளுக்கான போட்டி நடைபெற்றது. இந்த தெரிவுப் போட்டியில் மதுரை திருப்பாலை ஸ்ரீராம் நல்லமணி யாதவா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஆர்.கோதைநாயகி மாநில அளவிலான கால்பந்தாட்ட தெரிவுப் போட்டியில் கலந்து கொண்டு தேர்வு பெற்றுள்ளார். இதன் மூலம் பஞ்சாபில் நடக்கும் தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் தமிழ்நாடு அணிக்காக கலந்து கொண்டு விளையாடவுள்ளார்.

தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவி ஆர்.கோதைநாயகியை, ஸ்ரீராம் நல்லமணி யாதவா பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைவர் என்.என்.ஆர்.நல்லமணி, பள்ளி செயலாளர் என்.என்.ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் பி.அசோதை, உடற்கல்வி ஆசிரியர்கள் ஷீபா, அருண் ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x