Published : 12 Aug 2023 04:30 AM
Last Updated : 12 Aug 2023 04:30 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்கள் ஆக. 14-ம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 14-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் நடந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு: இந்நிலையில், ஆக. 11-ம் தேதி (நேற்று) மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலஅவகாசம் வரும் 14-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் சேராதவர்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x