Published : 09 Aug 2023 06:47 AM
Last Updated : 09 Aug 2023 06:47 AM

கிண்டி அரசு ஐடிஐ-யில் ஆக.16 வரை சேர்க்கை

சென்னை: சென்னை ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கிண்டியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), டெக்ஸ்டாப் பப்ளிசிங் ஆபரேட்டர், டிஜிட்டல் புகைப்படக்காரர், உணவு தயாரிப்பு, உணவு, குளிர்பான சேவை உதவியாளர், செல்போன் தொழில்நுட்பவியலாளர் மற்றும் செயலி பரிசோதனையாளர் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தகுதியுடைய மாணவர்கள் வரும் 16-ம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம். இந்த கட்டணமில்லா பயிற்சியில், இலவச சீருடை, மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750, விலையில்லா வரைப்படக்கருவிகள் போன்ற சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ், வேலை வாய்ப்பும் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044-22501350 என்ற தொலைபேசி எண்ணிலும், தொழிற்பயிற்சி நிலையத்தின் சேர்க்கை உதவி மையத்தையும் அணுகலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x