ஆபாச வீடியோ மிரட்டல்: சென்னையில் இளம்பெண் தற்கொலை

ஆபாச வீடியோ மிரட்டல்: சென்னையில் இளம்பெண் தற்கொலை
Updated on
1 min read

சென்னை: ஆ​பாச வீடியோவை கணவருக்கு அனுப்பி விடு​வேன் என மர்ம நபர் மிரட்​டிய​தால், சாலிகி​ராமத்தைச் சேர்ந்த 27 வயது இளம்​பெண் தூக்கிட்டுத் தற்​கொலை செய்து கொண்​டார்.

சாலிகி​ராமம் பகு​தி​யைச் சேர்ந்த ரவிச்​சந்​திரன் என்​பவரது மனைவி ருசித்தா (27). இவரை கடந்த இரண்டு நாட்​களாக மர்ம நபர் ஒரு​வர்

செல்​போனில் அழைத்​து, அந்த பெண்​ணின் ஆபாச வீடியோக்​கள் தன்​னிடம் இருப்​ப​தாகக் கூறி மிரட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து ருசித்தா தனது கணவரிடம் கூறிய​போது, அவர் சமா​தானம் செய்​துள்​ளார். இருந்​தா​லும் அவர் மன உளைச்​சலில் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் கணவர் வேலைக்​குச் சென்ற நேரத்​தில், வீட்​டில் தனி​யாக இருந்த ருச்​சிதாதூக்​கிட்​டுத் தற்​கொலை செய்து கொண்​டார்.

மாலை வீடு திரும்​பிய கணவர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்​த​போது ருசித்தா சடல​மாக மீட்​கப்​பட்​டார். தகவலறிந்து வந்த விரு​கம்​பாக்​கம் போலீ​ஸார், உடலைக் கைப்​பற்றி ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு பிரேதப் பரிசோதனைக்​காக அனுப்பி வைத்​தனர்.

மிரட்​டல் விடுத்த அந்த நபர் யார்? எதற்​காக மிரட்​டி​னார்? என்​பது குறித்து சைபர் க்ரைம் உதவி​யுடன் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

ஆபாச வீடியோ மிரட்டல்: சென்னையில் இளம்பெண் தற்கொலை
கொளத்தூரில் வி.எஸ்​.​பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து ஸ்டாலின் மனு: அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in