கொளத்தூரில் வி.எஸ்​.​பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து ஸ்டாலின் மனு: அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு

கொளத்தூரில் வி.எஸ்​.​பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து ஸ்டாலின் மனு: அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு
Updated on
1 min read

சென்னை: கொளத்​தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ்​.​பாபு வெற்றி பெற்​றதை செல்​லாது என அறிவிக்​கக் ​கோரி முன்​னாள் முதல்​வர் ஸ்டா​லின் தொடர்ந்​துள்ள வழக்கை அவசர வழக்​காக விசாரிக்க மறுப்பு தெரி​வித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்றம் திங்​கள் அல்​லது செவ்​வாய்​கிழமை​ விசா​ரிக்​கப்​படும் என தெரி​வித்​துள்​ளது.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சென்னை கொளத்​தூர் தொகு​தி​யில் முன்​னாள் முதல்​வர் ஸ்டா​லினை எதிர்த்து தவெக சார்​பில் போட்​டி​யிட்ட வி.எஸ்​.​பாபு வெற்றி பெற்று எம்​எல்​ஏ-​வாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில் தேர்​தலில் இரண்​டா​மிடம் பிடித்த ஸ்டா​லினின் கோரிக்​கையை ஏற்று கொளத்​தூர் தொகு​தி​யில் 14 வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மற்​றும் விவிபேடு எனப்​படும் ஒப்​புகை சீட்டு இயந்​திரங்​கள் சரி​பார்க்​கப்​பட்​டன.

அதில் பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாக​வும், எனவே கொளத்​தூர் தொகு​தி​யில் வி.எஸ்​.​பாபு வெற்றி பெற்​றதை செல்​லாது என அறிவிக்கக்​கோரியும் ஸ்டா​லின் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், இந்த வழக்கை அவசர வழக்​காக விசா​ரிக்​கக்​கோரி ஸ்டா​லின் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன், தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று முறை​யீடு செய்​தார்.

அதையேற்க மறுத்த நீதிப​தி​கள், இந்த வழக்கு வரும் திங்​கள் அல்​லது செவ்​வாய்​கிழமை வழக்​கம்​போல வி​சா​ரணைக்கு எடுத்​துக்​கொள்​ளப்​படும்​ என தெரிவித்துள்ளனர்.

கொளத்தூரில் வி.எஸ்​.​பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து ஸ்டாலின் மனு: அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சம்பவத்தை நேரில் பார்த்த சகோதரர் உட்பட இருவரிடம் சிபிஐ விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in