தி.நகரில் ஒரே இடத்தில் பணியாற்றும் 2 பேர் அடுத்தடுத்து கொலை

ராஜேந்திரன், ரவிகுமார்

ராஜேந்திரன், ரவிகுமார்

Updated on
1 min read

சென்னை: ​தி.நகரில் ஒரே இடத்​தில் பணி​யாற்​றும் 2 பேர் அடுத்​தடுத்து கொலை செய்​யப்​பட்ட சம்​பவங்​களில் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். தி.நகர் தியாக​ராய சாலை​யில் நேற்று முன்​தினம் இரவு ஒரு​வர் மயங்​கிய நிலை​யில் கிடந்​தார். இதைக் கண்ட அப்​பகுதி மக்​கள் மாம்​பலம் போலீ​ஸாருக்கு தகவல் கொடுத்​தனர்.

போலீ​ஸார் சென்று பார்த்​த​போது சம்​பந்​தப்​பட்ட நபர் இறந்து கிடந்​தது தெரிந்​தது. இதையடுத்து உடலை மீட்ட போலீ​ஸார் பிரேதப் பரி சோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

தொடர்ந்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் சடல​மாகக் கிடந்​தவர், தி.நகர் கண்​ணம்​மாபேட்​டையைச் சேர்ந்த ராஜேந்​திரன் (50) என்​பதும், அவர் தி.நகரில் உள்ள விஜயா மஹாலில் துப்​புர​வுப் பணி​யாள​ராக வேலை செய்து வந்​ததும் தெரிய​வந்​தது.

மேலும் நேற்று முன்​தினம் மாலை சம்பவ இடத்​துக்கு அரு​கில் உள்ள டாஸ்​மாக் கடை​யில் மது அருந்​தி​ய​போது, அங்கு இருந்த தேனாம்​பேட்டை கங்​கைக்​கரைபுரத்​தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலாஜி​யுடன் (34) ராஜேந்​திரனுக்கு வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது.

பின்​னர் ராஜேந்​திரன் அங்​கிருந்து சென்​ற​போது, பாலாஜி அவரை வழிமறித்து தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது. இதில் கீழே விழுந்த ராஜேந்​திரனுக்கு தலை​யில் பலத்த காயம் ஏற்​பட்​டு, சுயநினைவை இழந்து பின்​னர் உயி​ரிழந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இதையடுத்து பாலாஜியை போலீ​ஸார் கைது செய்​தனர்.

துப்​புரவு மேஸ்​திரி

விஜயா மஹால் திருமண மண்​டபத்​தின் பின்​புறத்​தில் ஒரு​வர் தலை​யில் ரத்​தக் காயங்​களு​டன் கிடப்​ப​தாக நேற்று முன்​தினம் இரவு போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. சம்பவ இடத்​துக்கு விரைந்த போலீ​ஸார், காயமடைந்த நபரை 108 ஆம்​புலன்ஸ் மூலம் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

விசா​ரணை​யில், காயமடைந்​தவர் ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தைச் சேர்ந்த ரவி​கு​மார் (46) என்​பதும், அவர் இங்கு திருமண நிகழ்ச்​சிகளுக்​கான துப்​புர​வுப் பணி​யாளர்​களை அழைத்து வரும் மேஸ்​திரி​யாக பணி​யாற்றி வந்​ததும் தெரிய​வந்​தது.

விஜயா மஹாலில் நடை​பெற்ற நிகழ்ச்​சிக்​காக பணி​யாளர்​களை அழைத்து வந்து வேலை செய்து கொண்​டிருந்​த​போது, தன்​னிடம் வேலை பார்த்த கன்​னி​யாகுமரி மாவட்​டம், நாகர்​கோ​விலைச் சேர்ந்த மணி என்ற சொர்​ணகு​மாரை (65) வேலை தொடர்​பாக ரவி​கு​மார் பலமுறை கண்​டித்​த​தாக கூறப்​படு​கிறது.

இதனால் ஆத்​திரமடைந்த மணி சம்​பவத்​தன்று வேலை நடை​பெற்​றுக் கொண்​டிருந்​த​போது கட்​டை​யால் ரவி​கு​மாரை தாக்​கி​விட்டு தப்​பிச் சென்​றுள்​ளார். இதையடுத்து கொலை முயற்சி உள்​ளிட்ட பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார், மணியை கைது செய்​தனர்.

இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த ரவி​கு​மார் சிகிச்சை பலனின்றி நேற்று உயி​ரிழந்​தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்​காக மாற்​றப்​பட்​டுள்​ளது.

கொலை செய்​யப்​பட்ட ராஜேந்​திரன் மற்​றும் ரவி​கு​மார் இரு​வரும் தி.நகரில் உள்ள விஜயா மஹாலில் பணி​யாற்றி வந்​தவர்​கள் என்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. ஒரே நாளில் ஒரே பணி​யிடத்​துடன் தொடர்​புடைய 2 பேர் உயி​ரிழந்த சம்​பவம் அப்​பகு​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​ உள்​ளது.

<div class="paragraphs"><p>ராஜேந்திரன்,&nbsp;ரவிகுமார்</p></div>
அமோனியா வாயுக் கசிவு விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in