பாஜக பெண் நிர்வாகியின் இரட்டை குழந்தைகள் குறித்து சர்சைக்குரிய கருத்து: திருச்சி சூர்யா கைது

பாஜக பெண் நிர்வாகியின் இரட்டை குழந்தைகள் குறித்து சர்சைக்குரிய கருத்து: திருச்சி சூர்யா கைது
Updated on
1 min read

சென்னை: பாஜக மாநில விளை​யாட்டு மற்​றும் திறன் மேம்​பாட்​டுப் பிரிவு செய​லா​ள​ராக இருப்​பவர் அலிஷா அப்துல்​லா. இவர் சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜை, நேற்று முன்​தினம் சந்​தித்து புகார் மனு அளித்​தார்.

அதில், “12 நாட்​களுக்கு முன்​னர் எனக்​குப் பிறந்த இரட்​டைக் குழந்​தைகளை பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை​யுடன் தொடர்​பு​படுத்தி யூடியூபர் முக்​தார், திருச்சி சூர்யா ஆகியோர் இழி​வான கருத்​துகளு​டன் வீடியோ வெளி​யிட்​டுள்​ளனர்.

எனவே அவர்​கள் இரு​வரை​யும் கைது செய்து சிறை​யில் அடைக்க வேண்​டும்” என்று குறிப்​பிட்டு இருந்​தார். இதுகுறித்து உரிய விசா​ரணை நடத்த போலீ​ஸாருக்கு காவல் ஆணை​யர் உத்​தர​விட்​டார்.

அதன்​படி சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள சைபர் க்ரைம் போலீ​ஸார், வழக்​குப் பதிந்து உடனடி விசா​ரணை​யில் இறங்​கினர். இதில் அலிஷா அப்​துல்லா புகாரில் தெரி​வித்​திருந்​தது உண்மை என தெரிய​வந்​தது.

இதையடுத்து திருச்சி சூர்​யா, யூடியூபர் முக்​தார் ஆகியோரை கைது செய்ய தனிப்​படை அமைக்​கப்​பட்​டது. முதல்​கட்​ட​மாக தனிப்​படை போலீ​ஸார் திருச்சி சென்​று, திருச்சி சூர்​யாவை (33) நேற்று அதி​காலை கைது செய்​துனர்.

விசா​ரணைக்​குப் பின்​னர் சிறை​யில் அடைக்​கப்​படு​வார் என போலீ​ஸார் தெரி​வித்தனர். இந்த வழக்​கில் தொடர்​புடைய யூடியூபர் முக்​தார் தலைமறை​வாகி​விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

அவரை தனிப்​படை போலீ​ஸார் தொடர்ந்து தேடி வரு​கின்​றனர். சமூக ஊடகங்​கள், இணை​யதளங்​களில் பெண்​களை அவம​திக்​கும் வகை​யில் ஆபாச​மான, இழி​வான கருத்​துகளை வெளி​யிடு​வது கடுமை​யான குற்​றம்.

இது​போன்ற செயல்​களில் ஈடு​படு​வோர் யாராக இருந்​தா​லும் அவர்​கள் மீது பாரபட்​சமின்றி சட்​டப்​படி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என காவல் ஆணை​யர் அமல்​ராஜ் எச்​சரித்​துள்​ளார்.

பாஜக பெண் நிர்வாகியின் இரட்டை குழந்தைகள் குறித்து சர்சைக்குரிய கருத்து: திருச்சி சூர்யா கைது
இண்டியா கூட்டணியை விட்டு விலகும் திமுக? - இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாஜக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in