சிவகங்கையில் பெண் காவலருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞர்கள் கைது

சிவகங்கையில் பெண் காவலருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்​கை​யில் பெண் காவலரை கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்த 3 இளைஞர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சிவகங்கை பகு​தி​யைச் சேர்ந்த 29 வயதுள்ள திரு​மண​மான பெண் காவலர் ஒரு​வர், திருப்​புவனம் அருகே தூதை பகு​தி​யைச் சேர்ந்த லாரி ஓட்​டுநர் ராபின் (28) என்​பவருடன் பழகி வந்​தார். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு ராபின் அந்த பெண் காவலரை சிவகங்கை அருகே காட்​டுப் பகு​திக்குச் அழைத்​துச் சென்​றார். அப்​போது, அங்கு ராபினின் நண்​பர்​கள் சித்​தாலங்​குடியைச் சேர்ந்த மகா​ராஜா, ஹரிஸ் ஆகியோர் வந்​தனர்.

பின்​னர் மூவரும் சேர்ந்து பெண் காவலரை கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​தனர். அவர்​களிடம் இருந்து தப்​பித்த அந்த பெண் காவலர், காவல் கட்​டுப்​பாட்டு அறையை செல்​போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரி​வித்​தார். இதையடுத்து சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்ற சிவகங்கை நகர் போலீ​ஸார் அந்த பெண் காவலரை மீட்​டனர்.

மேலும் தப்பி ஓட முயன்ற ராபின், மகா​ராஜா, ஹரிஸ் ஆகியோரை போலீ​ஸார் விரட்​டிச் சென்று பிடித்​தனர். அவர்​களை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று தீவிர விசா​ரணை நடத்​தினர். இச்​சம்​பவம் குறித்து மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் சிவபிர​சாத், டிஎஸ்பி அமல அட்​வின் ஆகியோர் விசாரணை நடத்​தினர். அதைத்​தொடர்ந்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிந்து ராபின் உள்​ளிட்ட 3 பேரை​யும் கைது செய்தனர்.

சிவகங்கையில் பெண் காவலருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞர்கள் கைது
‘ஜென்ஸீ’ தலைமுறை சரியான முடிவு எடுக்க வேண்டும் - அண்ணாமலை கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in