சென்னை | 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி எஸ்.ஐ. காயம்: வாகனம் ஓட்ட அனுமதித்த தந்தையும் கைது

சென்னை | 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி எஸ்.ஐ. காயம்: வாகனம் ஓட்ட அனுமதித்த தந்தையும் கைது
Updated on
1 min read

சென்னை: 15 வயது சிறுவன் ஓட்​டிச் சென்ற பைக் மோதி வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்த எஸ்ஐ காயம் அடைந்​தார். இந்த விபத்​தில் சிறு​வனை​யும், அவனுக்கு பைக் கொடுத்த தந்​தையை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

குற்​றச் செயல்​களை தடுக்​கும் வகை​யில், சென்னை முழு​வதும் போலீ​ஸார் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டுள்​ளனர். அதன்​படி, டி.பி சத்​திரம் காவல் நிலை​யத்​தில் பணிபுரி​யும் சிறப்பு எஸ்ஐ முத்​துகிருஷ்ணன், தலை​மைக் காவலர் கீத்​கு​மார், ஊர்​காவல்​படை வீரர் கோகுல் ஆகியோர் கொண்ட தனிப்​படை போலீ​ஸார் நேற்​று​முன்​தினம் இரவு டி.பி.சத்​திரம் போலீஸ் பூத் அருகே வாகன தணிக்​கை​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அதி​காலை 2 மணி​யள​வில் அந்த வழி​யாக பைக் ஒன்று அதிவேக​மாக வந்​தது. சந்​தேகம் அடைந்த தனிப்​படை போலீ​ஸார், அந்த பைக்கை தடுத்து நிறுத்த முயன்​றனர். ஆனால், கட்​டுப்​பாட்டை இழந்த அந்த பைக் சிறப்பு எஸ்ஐ முத்​துகிருஷ்ணன் மீது மோதி விட்டு நிற்​காமல் சென்​றது. இந்த விபத்​தில் முத்​து கிருஷ்ணனுக்கு தலை​யின் பின்​பகு​தி, இரண்டு கண்​களுக்கு அரு​கில் மற்​றும் இடது தொடை பகு​தி​யில் பலத்த காயம் ஏற்​பட்​டது.

உடனடி​யாக சக போலீ​ஸார் அவரை மீட்​டு, சென்னை கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்​சம்​பவம் குறித்​து, கீழ்ப்​பாக்​கம் போக்​கு​ வரத்து புல​னாய்வு பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து நடத்திய விசா​ரணை​யில், விபத்தை ஏற்​படுத்​திய பைக்கை ஓட்​டியது 15 வயது சிறு​வன் என்​பது தெரிய வந்​தது.

இதையடுத்​து, அந்த சிறு​வனை கைது செய்​து சிறார் சீர்​திருத்த பள்​ளி​யில் சேர்க்​கப்​பட்​டார். மேலும், உரிய ஓட்​டுநர் வயது எட்​டாத சிறு​வனிடம் பைக்கை ஒப்​படைத்து ஓட்ட அனு​ம​தித்த குற்​றத்​துக்​காக, வாக​னத்​தின் உரிமை​யாள​ரான சிறு​வனின் தந்​தையை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

போலீஸ் எச்​சரிக்கை

வாகன ஓட்​டிகள் பொறுப்​புடன் வாக​னங்​களை ஓட்​ட​வும், போக்​கு​வரத்து விதி​கள் மற்​றும் ஒழுங்கு முறை​களை முறை​யாக பின்​பற்​ற​வும், வாக​னம் ஓட்​டும் போது எப்​போதும் மனித உயிர்​களின் மதிப்பை உணர்ந்​தும் செயல்பட வேண்​டும்.

மேலும், உரிய வயது அடை​யாத (மைனர்) பிள்​ளை​களை வாக​னங்​களை ஓட்ட ஊக்​குவிக்​கவோ அல்​லது அதற்கு துணை​யாகவோ இருக்க வேண்​டாம். மீறி​னால், அவர்​கள் மீதும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என சென்​னை காவல்​ ஆணை​யர்​ அமல்​ராஜ் எச்​சரித்​துள்​ளார்.

சென்னை | 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி எஸ்.ஐ. காயம்: வாகனம் ஓட்ட அனுமதித்த தந்தையும் கைது
ஆர்மீனியன், தம்புச்செட்டி தெருக்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வு: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in