சென்னை | தொழில் வரி செலுத்துவதாக ரூ.5 லட்சம் மோசடி: தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் கைது

சென்னை | தொழில் வரி செலுத்துவதாக ரூ.5 லட்சம் மோசடி: தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் கைது
Updated on
1 min read

சென்னை: தொழில் வரி செலுத்​து​வ​தாக ரூ.5 லட்​சம் மோசடி செய்த தனி​யார் நிறுவன நிர்​வாக இயக்​குநர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னை அசோக் நகரைச் சேர்ந்​தவர் பாபு(49).

அதே பகுதி 9-வது அவென்​யூ​வில் தனி​யார் நிறு​வனம் ஒன்றை நடத்தி வரு​கிறார். இவரது நிறு​வனத்​தில் வரி செலுத்​துதல் தொடர்​பாக, கோவிலம்​பாக்​கத்​தைச் சேர்ந்த தனி​யார் நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் கோவிலம்​பாக்​கம், ஓம் சக்தி நகரைச் சேர்ந்த பிரபு(43) என்​பவரை நியமனம் செய்​து, நிறு​வனத்​தின் வரியை செலுத்தி வந்​தார்.

அதன்​படி, பிரபு​விடம் கடந்த 2024-ம் ஆண்டு ரூ.2.13 லட்​சம் மற்​றும் 2025-ம் ஆண்டு ரூ.3.38 லட்​சம் என மொத்​தம் ரூ.5.51 லட்​சத்தை வரி செலுத்​து​வதற்​காக பாபு கொடுத்​துள்​ளார்.

இதையடுத்​து, இதற்​கான 2 பில் ரசீதுகளை பாபுவுக்கு வாட்​ஸ்​அப் மூலம் பிரபு அனுப்பி வைத்​துள்​ளார். இதற்​கிடையே, பாபு 2 ஆண்​டு​களாக தொழில் வரி செலுத்​தாமல் பாக்கி வைத்​துள்​ள​தாக தொழில் வரி நிறு​வனத்​திடம் இருந்து தகவல் வந்​தது.

அதிர்ச்​சி​யடைந்த பாபு, இதுகுறித்து விசா​ரித்​த​போது, ரூ.5.51 லட்​சம் பெற்​றுக் கொண்ட பிரபு, ரூ.51 ஆயிரம் மட்​டும் தொழில் வரி செலுத்தி ரூ.5 லட்​சத்தை மோசடி செய்​துள்​ளார்.

அதோடு போலி​யான ரசீதுகளை தயார் செய்து அனுப்​பியது தெரிய வந்​தது. இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலை​யத்​தில் பாபு புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப்​ ப​திந்து பிரபுவைக் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

சென்னை | தொழில் வரி செலுத்துவதாக ரூ.5 லட்சம் மோசடி: தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் கைது
சென்னை - சிங்கப்பூர் விமானத்தில் ஏசி பழுது: ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் பயணிகள் தவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in