

ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 16 வயது சிறுமிக்கு, கடந்த ஏப். 16-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பதும், அவரது தாத்தாவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரை விசாரித்த குன்னூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் தாத்தாவான 75 வயது முதியவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செந்தில்குமார், குற்றம் சுமத்தப்பட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்குமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பி.செந்தில்குமார் ஆஜரானார். தொடர்ந்து, சிறுமியின் தாத்தா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.