தமிழ்ப் பல்கலை.யில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக வழக்கு: பேராசிரியர்கள் 32 பேருக்கு நோட்டீஸ்

தமிழ்ப் பல்கலை.யில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக வழக்கு: பேராசிரியர்கள் 32 பேருக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

தஞ்​சாவூர்: தமிழ்ப் பல்​கலைக்​கழகத்​தில் முறை​கே​டாக பணி​யில் சேர்ந்​த​தாக தொடரப்​பட்ட வழக்​கில், 32 பேராசிரியர்​களுக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

தஞ்சை தமிழ்ப் பல்​கலை.​யில் 2017-2018-ல் 40 பேராசிரியர்கள் நியமனம் செய்​யப்​பட்​ட​தில் முறை​கேடு நடை​பெற்​ற​தாக எழுந்த புகாரின் பேரில், சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் கல்​வித் தகு​தியை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்​கப்​பட்​டது.

இக்​குழு​வினர் ஆய்வு நடத்​தி, விதி​களை மீறி பேராசிரியர் நியமனம் நடந்​திருப்​ப​தாக 2021 ஆக.11-ல் அறிக்கை தாக்​கல் செய்​தனர். இதற்கு 8 பேர் முறை​யாக விளக்​கம் அளித்​ததுடன், நீதி​மன்​றத்​தை​யும் நாடினர்.

மீத​முள்ள 32 பேரின் நியமனத்​துக்கு காரண​மானோர் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு, அப்​போதைய தமிழக ஆளுநரும், பல்​கலை. வேந்​தரு​மான பன்​வாரிலால் புரோகித் உத்​தர​விட்​டார்.

ஆனால், எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. இது தொடர்​பாக நீதி​மன்​றத்​தில் பொது நல வழக்​கு​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

தொடர்ந்​து, 2023 அக்​. 27-ம் தேதி அப்​போதைய துணைவேந்​தர் திரு​வள்​ளுவன், பேராசிரியர்​கள் நியமன விவ​காரத்​தில் உரிய நடவடிக்கை எடுப்​ப​தற்​குப் பதிலாக, சம்​பந்​தப்​பட்ட ஆசிரியர்​களுக்கு தகு​தி​காண் பரு​வம் நிறைவு வழங்​கி​னார்.

இதையடுத்​து, கடந்த ஆண்டு அக். 3-ம் தேதி திரு​வள்​ளுவனிடம் விளக்​கம் கேட்டு ஆளுநர் ஆர்​.என்​.ரவி நோட்​டீஸ் அனுப்​பி​னார்.

தொடர்ந்​து, துணைவேந்​தரின் விளக்​கம் மற்​றும் ஆதா​ரங்​கள் அடிப்​படை​யில் விதி​முறை​கள் மீறப்​பட்​டிருப்​ப​தாக கடந்த ஆண்டு நவ.19-ம் தேதி திரு​வள்​ளுவனை பணி​யிடை நீக்​கம் செய்து ஆளுநர் உத்​தர​விட்​டார்.

மேலும், இந்த முறை​கேடு நியமனம் புகார் தொடர்​பாக விசா​ரிக்க ஓய்​வு​பெற்ற நீதிபதி ஜெயச்​சந்​திரன் தலை​மை​யில் குழு அமைத்து உத்​தர​விட்​டார். தொடர்ந்​து, நீதிபதி ஜெயச்​சந்​திரன் தலை​மையி​லான குழு விசா​ரணை நடத்​தி, கடந்த செப். 9-ம் தேதி ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்​பித்​தது.

இதனடிப்​படை​யில், ஆளுநரின் முதன்​மைச் செய​லா​ளர் கிர்​லோஷ் குமார், அக்​.10-ம் தேதி சிண்​டிகேட் கூட்​டத்தை நடத்​தி, 60 நாட்​களுக்​குள் பேராசிரியர்​கள் நியமனம் தொடர்​பான நடவடிக்​கைகளை முடிக்க வேண்​டும் என்று பல்​கலை.க்கு கடிதம் அனுப்​பி​னார்.

இதன்​பேரில் பேராசிரியர்​கள் 32 பேருக்​கும் விளக்​கம் கேட்டு நேற்று முன்​தினம் நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. 15 நாட்​களுக்​குள் விளக்​கம் அளிக்​கு​மாறு நோட்​டீஸில் ஆளுநர் உத்​தர​விட்​டுள்​ளார். இந்த விவ​காரம் தமிழ்ப் பல்​கலை. பேராசிரியர்​கள் மத்​தி​யில் கலக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தமிழ்ப் பல்கலை.யில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக வழக்கு: பேராசிரியர்கள் 32 பேருக்கு நோட்டீஸ்
எஸ்ஐஆர் படிவத்தை டிச.14 வரை அளிக்கலாம்: அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in