கரூர் அருகே பள்ளிப் பேருந்து மீது லாரி மோதி விபத்து: 16 மாணவர்கள், ஓட்டுநர் காயம்

கரூர் அருகே பள்ளிப் பேருந்து மீது லாரி மோதி விபத்து: 16 மாணவர்கள், ஓட்டுநர் காயம்
Updated on
1 min read

கரூர்: பள்ளிப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 மாணவிகள், 6 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர்.

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று (செப்.9) காலை மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பள்ளிப் பேருந்து கிராமம், கிராமமாக சென்று மாணவ, மாணவிகளை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது.

பாலவிடுதி செங்காட்டுப்பட்டி பகுதியில் மாணவ, மாணவிகளுடன் பள்ளி பேருந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக மாட்டுத் தீவனம் ஏற்றி சென்ற லாரி, எதிர்பாராத விதமாக பள்ளிப் பேருந்து மீது மோதியதில் பள்ளி வாகனத்தின் முன்பக்கம் சேதமடைந்து கண்ணாடிகள் உடைந்தன.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் தாஸ் (31), மாணவிகள் 10 பேர், 6 மாணவர்கள் என 17 பேர் காயமடைந்தனர். இதில் சிலருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் மைலம்பட்டி அரசு மருத்துவனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக, அனைவரும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து விபத்து குறித்து பாலவிடுதி போலீஸார், லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் அருகே பள்ளிப் பேருந்து மீது லாரி மோதி விபத்து: 16 மாணவர்கள், ஓட்டுநர் காயம்
புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை; செப்.11-க்கு வழக்கு ஒத்திவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in