பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு தலா 7 ஆயுள் சிறை

ஏக காலத்தில் அனுபவிக்க கரூர் நீதிமன்றம் உத்தரவு
பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு தலா 7 ஆயுள் சிறை
Updated on
1 min read

கரூர்: மதுரை அவனி​யாபுரத்​தில் வாக​னங்​கள் மீது பெட்​ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்​லப்​பட்ட வழக்​கில் 9 பேருக்கு வாழ்​நாள் சிறை தண்​டனை​யும், தலா ரூ.27.90 லட்​சம் அபராத​மும் விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது.

மதுரை அவனி​யாபுரத்​தில் 2012-ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழா​வில் பங்​கேற்​று​விட்டு திரும்​பிய வாக​னங்​கள் மீது பெட்​ரோல் குண்டு வீசப்​பட்​ட​தில் 7 பேர் உயி​ரிழந்​தனர். 11 பேர் காயமடைந்​தனர்.

இதுதொடர்​பாக மதுரை மேல அனுப்​பானடியைச் சேர்ந்த ராமர்​பாண்டி (36), மதுரை மாவட்​டம் சிந்​தாமணி​யைச் சேர்ந்த மணி​கண்​டன் (37), கார்த்​திக் (36), முத்​து​விஜி (22), சந்​திரசேகர் (31), சோனையா (31), நாக​ராஜ் (31), முத்​துக்​கருப்​பன் (31), மோகன் (38), விக்​னேஷ் (33), சந்​தோஷ் (33) ஆகிய 11 பேரை போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

இவ்​வழக்​கில் முத்து விஜி கொல்​லப்​பட்ட நிலை​யில், குற்​ற​வாளி​களின் உயிருக்கு ஆபத்து இருப்​ப​தாகக் கூறியதால் இவ்​வழக்கு கரூர் மாவட்ட அமர்வு நீதி​மன்​றத்​துக்கு 2017-ம் ஆண்டு மாற்​றப்​பட்​டது. மேலும், இவ்​வழக்​கில் கரூர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி​விட்டு திரும்​பிய ராமர் பாண்டி அரவக்​குறிச்சி அருகே 2024-ம் ஆண்டு கொல்​லப்​பட்​டார்.

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நடந்து வந்த இந்த வழக்​கில், 69 சாட்​சிகளிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டு, உயி​ரிழந்த 2 பேர் தவிர மீதி​யுள்ள 9 பேரும் குற்​ற​வாளி​கள் என்று மார்ச் 23-ம் தேதி நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

அதன்​பிறகு தண்​டனை விவரம் அறி​விப்பு ஏப்​.6, ஏப்​.15, ஏப்​.21 (நேற்​று) ஆகிய தேதி​களுக்கு 3 முறை தள்​ளிவைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், இந்த வழக்​கில் மாவட்ட நீதிபதி கே.ஹெச்​. இளவழகன் நேற்று தீர்ப்பு வழங்​கி​னார்.

சலுகைகள் கிடையாது

அதில், குற்​ற​வாளி​கள் 9 பேருக்​கும் தலா 7 ஆயுள் சிறை தண்​டனை, கொலை முயற்சி வழக்​கில் 10 ஆண்​டு​கள், பொதுச் சொத்​துக்கு சேதம் விளை​வித்​த​தாக (பிபிடிஎல்) இரு பிரிவு​களில் 5 மற்​றும் 4 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்​ததுடன், தண்​டனை​யில் எவ்​வித சலுகைகளும் வழங்க முடி​யாது என்​றும் தண்​டனை​களை ஏக காலத்​தில் அனுபவிக்க வேண்​டும் என்​றும் அதே நேரத்​தில் வாழ்​நாள் முழு​வதும் சிறை​யில் இருக்​க​வும் உத்​தர​விட்​டார்.

மேலும், ஒவ்​வொரு​வருக்​கும் தலா ரூ.27.90 லட்​சம் அபராதம் விதித்து உத்​தர​விட்​டார். இதையடுத்​து, குற்றவாளிகள் 9 பேரும் திருச்சி மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​.

பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு தலா 7 ஆயுள் சிறை
குன்னம் தொகுதியில் திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in