இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய ஐடி ஊழியர் கைது

இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய ஐடி ஊழியர் கைது
Updated on
1 min read

சென்னை: ஐடி நிறுவன விருந்து நிகழ்​வின்​போது, மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்​டிய சக ஊழியரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை ஓட்​டேரி கொசப்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்த திரு​மண​மான பெண் (36) ஒரு​வர், கடந்த 2024-ம் ஆண்டு பட்​டாபி​ராமில் ஐடி நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​தார். அப்​போது அவருடன் திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தைச் சேர்ந்த கோகுல்​நாத் (26) என்​பவரும் பணி​யாற்றி வந்​துள்​ளார்.

நிறு​வனம் சார்​பில் நடந்த பார்ட்டி நிகழ்​வின்​போது, கோகுல்​நாத் அந்த பெண்​ணுக்​குத் தெரி​யாமல் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்​துள்​ளார். மயக்​கத்​தில் இருந்த அவரை ஆபாச​மாக வீடியோ எடுத்​துள்​ளார்.

பின்​னர் அந்த வீடியோவை காண்​பித்து மிரட்​டி, பலமுறை அவரிடம் பாலியல் வன்​கொடுமை​யில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதனால் கடும் மன உளைச்​சலுக்கு ஆளான பெண், வேலையை ராஜி​னாமா செய்​துள்​ளார். தனது செல்​போன் எண்​ணை​யும் மாற்​றி​விட்டு கணவருடன் வாழ்ந்து வந்​துள்​ளார்.

இந்த நிலை​யில், 2 ஆண்​டு​களுக்​குப் பிறகு, அந்த பெண்​ணின் புதிய செல்​போன் எண்ணை கண்​டு​பிடித்த கோகுல்​நாத் கடந்த 26-ம் தேதி அவரை மீண்​டும் தொடர்பு கொண்​டுள்​ளார். ஆபாச வீடியோக்​களை சமூக வலை​தளங்​களில் பதிவேற்​றம் செய்​து​விடு​வ​தாக கூறி பாலியல் ரீதி​யாக மீண்​டும் மிரட்​டி​யுள்​ளார்.

மேலும் 2 பெண்கள்

இதுகுறித்து பெண் கொடுத்த புகாரின்​பேரில், ஓட்​டேரி போலீ​ஸார் கோகுல்​நாத்தை பிடித்து விசா​ரித்​தனர்.

இதே​போல, அந்த நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் மேலும் 2 பெண்​களை​யும் அவர் மிரட்டி தவறாக நடந்​து கொண்​டது தெரிய​வந்​தது. அவரை போலீ​ஸார் கைது செய்​து, செல்​போனை கைப்​பற்றி தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய ஐடி ஊழியர் கைது
தருமபுரி கோயில்களுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பு நிலத்தின் ஆக்கிரமிப்பை 12 வாரத்தில் அகற்ற கெடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in