சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது

நவீன், பிரார்த்தனா

நவீன், பிரார்த்தனா

Updated on
1 min read

சென்னை: ரூ.65 லட்​சம் பணத்​துடன் தப்​பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்​கை​யுடன் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, பெரம்​பூர் பேரக்ஸ் ரோடு பகு​தி​யில் வசித்து வருபவர் நிகல்​சந்த் ஜெயின் (51). சென்​னை, என்​எஸ்சி போஸ் சாலை​யில் தங்​கம் மற்​றும் வெள்ளி நகைக்​கடை நடத்தி வரு​கிறார்.

இவரது கடை​யில் 4 வருடங்​களாக பழைய வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த நவீன் (28) என்​பவர் வேலை செய்து வரு​கிறார். கடந்த 6-ம் தேதி நிகல்​சந்த் ஜெயின், தனது தங்கை கணவரிடம் சென்​று, 26 கிலோ வெள்ளிக் கட்​டியை பெற்​றுக் கொண்​டு, மின்ட் தெரு​வில் உள்ள திலீப் என்​பவரிடம் கொடுத்​து​விட்​டு, அவரிட​மிருந்து பணம் ரூ.65 லட்​சம் பெற்று தன்​னிடம் அதை கொடுக்​கு​மாறு நவீனிடம் கூறி அனுப்பி வைத்​தார்.

அதன்​படி, நவீன் ரூ.65 லட்​சம் பெற்​றுக் கொண்​டார். ஆனால், அந்த பணத்தை முதலா​ளி​யிடம் கொடுக்காமல் நவீன் தலைமறை​வா​னார். இதுகுறித்​து, நிகல்​சந்த் ஜெயின் யானைக்க​வுனி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். நீல​கிரி மாவட்​டம், ஊட்​டி​யில் பதுங்கி இருந்த நவீனை போலீ​ஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்​தனர்.

விசா​ரணை​யில், அவர் சமீபத்​தில் பழக்​க​மான ராயபுரத்​தைச் சேர்ந்த திருநங்கை பிரார்த்​தனா (19) என்​பவருடன் சேர்ந்து திட்​ட​மிட்​டு, ரூ.65 லட்​சம் பணத்​துடன் தலைமறை​வானது தெரிய​வந்​தது.

முன்​ன​தாக, பிரார்த்​த​னா​விடம் ரூ.63 லட்​சத்தை கொடுத்து விட்​டு, ரூ.2 லட்​சத்​துடன் நவீன் தலைமறை​வாகி இருந்​தார். இதையடுத்​து, நவீன் பிடிபட்ட நிலை​யில், திருநங்​கை​யான பிரார்த்​த​னா​வும் கைது செய்​யப்​பட்​டார். அவரிட​மிருந்து ரூ.53 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இரு​வரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​.

<div class="paragraphs"><p>நவீன், பிரார்த்தனா</p></div>
திருவள்ளூர் | அதிமுக கிளை செயலருக்கு அரிவாள் வெட்டு: 3 இளைஞர்கள் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in