விவசாயி கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் சிறை

மேலும் 6 பேருக்கு தண்டனை விதித்து தீர்ப்பு
செய்யாறு விவசாயி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் (இடது ஓரம்) உள்ளிட்டோர்.

செய்யாறு விவசாயி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் (இடது ஓரம்) உள்ளிட்டோர்.

Updated on
1 min read

செய்​யாறு: விவசாயி கொலை வழக்​கில் திமுக முன்​னாள் எம்​எல்ஏ கமலக்​கண்​ணன் உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. திரு​வண்​ணா​மலை மாவட்​டம் செய்​யாறு வட்​டம் பெரியசெங்​காடு கிராமத்​தைச் சேர்ந்​தவர் விவசாயி முனு​சாமி(48).

இவருக்​கும், அதே பகு​தி​யைச் சேர்ந்த பெரு​மாள், இருசப்​பன் ஆகியோ​ருக்​கும் இடையே நிலம் தொடர்​பான முன்​விரோதம் இருந்​துள்​ளது. இந்​நிலை​யில், 2014 மே 17-ம் தேதி இவர்​களிடையே நிலம் தொடர்​பாக மீண்​டும் பிரச்​சினை ஏற்​பட்​டுள்​ளது.

அப்​போது, பெரு​மாள், இருசப்​பனுக்கு ஆதர​வாக செங்​காடு கிராமத்​தைச் சேர்ந்த மதி​யழகன்​(35), நந்​தகோ​பால்​(29), சுதாகர்​(35), துரை​முரு​கன்​(39) மற்​றும் வந்​த​ வாசி திமுக முன்​னாள் எம்​எல்ஏ கமலக்​கண்​ணன் ஆகியோ​ரும் சேர்ந்​து, முனு​சாமி​யுடன் தகராறில் ஈடு​பட்​டுள்​ளனர்.

அவர்​களிடையே ஏற்​பட்ட வாக்​கு​வாதம் மோதலாக மாறியது. இதில், முனு​சாமி, அவரது மனைவி பொன்​னி, உறவினர் அஞ்​சலி ஆகியோரை, பெரு​மாள், இருசப்​பன் மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் 7 பேர் சேர்ந்து கத்தி உள்​ளிட்​ட​வற்​றால் தாக்​கி​யுள்​ளனர்.

இதில் பலத்த காயமடைந்த முனு​சாமி செய்​யாறு அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். பின்​னர், மேல்​சிகிச்​சைக்​காக சென்னை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக் கப்​பட்ட முனு​சாமி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிர்​ இழந்தார்.

இதுகுறித்து அனக்​காவூர் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, மதி​யழகன், நந்​தகோ​பால், இருசப்​பன், பெரு​மாள், சுதாகர், துரை முரு​கன், முன்​னாள் எம்​எல்ஏ கமலக்​கண்​ணன் ஆகியோரைக் கைது செய்​தனர்.

இந்த வழக்கு திரு​வண்​ணா​மலை மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி ப.மதுசூதனன், குற்​றம் சுமத்​தப்​பட்ட முன்​னாள் எம்​எல்ஏகமலக்​கண்​ணன் மற்​றும் பெரு​மாள், இருசப்​பன், மதி​யழகன், நந்​தகோ​பால், சுதாகர், துரை​முரு​கன் ஆகியோ​ருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார்.

2009-ல் நடை​பெற்ற சட்​டப்​பேரவை இடைத்தேர்​தலில் கமலக்​கண்​ணன் திமுக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>செய்யாறு விவசாயி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் (இடது ஓரம்) உள்ளிட்டோர்.</p></div>
​கும்பகோணம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in