எழும்பூர் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தற்கொலை

புவனேஸ்​வரி, சிலம்​பரசன்

புவனேஸ்​வரி, சிலம்​பரசன்

Updated on
1 min read

சென்னை: எழும்​பூர் காவலர் குடி​யிருப்​பில் பெண் காவலர் தூக்​கிட்டு தற்கொலை செய்து கொண்​டார். பெற்​றோர் அளித்த புகாரின் பேரில் கணவர் கைது செய்யப்பட்டார். சென்னை எழும்​பூர் காவல் நிலை​யம் அருகே உள்ள காவலர் குடி​யிருப்​பில் வசித்து வந்​தவர் பெண் காவலர் புவனேஸ்​வரி (29).

விழுப்​புரம் மாவட்​டம், வானூர் அருகே உள்ள புள்​ளிசைபள்​ளம் பகு​தி​யைச் சேர்ந்த இவர், 2016-ல் காவல் துறை​யில் பணிக்கு சேர்ந்து, தற்போது எழும்​பூர் காவல் நிலைய குற்​றப்​பிரி​வில் பணி​யாற்றி வந்​தார்.

2024-ல் காவலர் சிலம்​பரசன் என்​பவரை காதலித்து திரு​மணம் செய்து கொண்​டார். திரு​மண​ம் ஆனதிலிருந்தே சிலம்​பரசன் தின​மும் மது அருந்​தி​விட்டு வந்து மனை​வியை அடித்து சித்​திர​வதை செய்​த​தாக கூறப்​படு​கிறது.

நேற்று முன்​தினம் இரவு வழக்​கம்​போல் மது அருந்​தி​விட்டு வந்த சிலம்​பரசன், புவனேஸ்​வரி​யிடம் தகராறில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. பின்​னர் இரு​வரும் தூங்​கச் சென்ற நிலை​யில், புவனேஸ்​வரி மின்​விசிறி​யில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டுள்​ளார். இரவில் கண்​விழித்​துப் பார்த்த சிலம்​பரசன், உடனடி​யாக காவல் துறைக்கு தகவல் தெரி​வித்​துள்​ளார்.

எழும்​பூர் போலீ​ஸார் நடத்திய முதற்​கட்ட விசா​ரணை​யில், புவனேஸ்​வரி திரு​வண்​ணா​மலையை சேர்ந்த வழக்​கறிஞ​ரான ஆண் நண்பர் ஒரு​வருக்கு ரூ.60 ஆயிரம் கடன் கொடுத்​துள்​ளார். கணவர் சிலம்​பரசன் அந்த பணத்தை திரும்ப வாங்​கு​மாறு மனை​வியை கட்​டாயப்​படுத்​தி​யுள்​ளார்.

அதன்​படி, புவனேஸ்​வரி கொடுத்த பணத்தை கேட்​ட​போது, சம்​பந்​தப்​பட்ட வழக்​கறிஞர் பணத்தை கொடுக்​க​வில்​லை​யாம். இதைத் தொடர்ந்து புவனேஸ்​வரி, வழக்​கறிஞர் மீது திரு​வண்​ணா​மலை மாவட்ட எஸ்​பி​யிடம் புகார் அளித்​துள்​ளார். சம்​பவத்​தன்று இந்த விவ​காரம் தொடர்​பாக கணவன், மனை​வி​யிடையே மீண்​டும் பிரச்​சினை ஏற்​பட்​டுள்​ளது.

இதன் தொடர்ச்​சி​யாகவே புவனேஸ்​வரி தற்​கொலை செய்து கொண்​டிருக்க வாய்ப்பு உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இருப்​பினும் இறப்​புக்​கான காரணம் குறித்து தொடர்ந்து விசா​ரித்து வரு​கிறோம் என போலீ​ஸார் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், புவனேஸ்​வரி​யின் பெற்​றோர் எழும்​பூர் காவல் நிலை​யத்​தில் சிலம்​பரசன் மீது புகார் தெரி​வித்​தனர்.

புவனேஸ்​வரி​யின் தாய் அன்​புக்​கரசி கூறும்​போது, “திரு​மண​மான நாளி​லிருந்து வரதட்​சணை கேட்டு மகளை, சிலம்பரசன் கொடுமைப்​படுத்த ஆரம்​பித்​தார். நேற்று முன்​தினம் இரவு 9 மணி​யள​வில் மகள் போன் செய்​து, நிலம் வாங்க கணவர் ரூ.2 லட்​சம் கேட்​ப​தாகக் கூறி​னார்.

நாங்​கள் மகளிடம் சண்​டை​யி​டாதீர்​கள், பணம் தரு​கிறோம் என்று கூறினோம். இரவு 10 மணிக்கு எழும்​பூர் போலீ​ஸார் எங்​களை அழைத்து புவனேஸ்​வரி தற்​கொலை செய்​து​கொண்​ட​தாக தெரி​வித்​தனர். சிலம்​பரசன்​தான், எங்​கள் மகளை கொலை செய்​திருக்க வேண்​டும். அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார். இதனிடையே, தற்கொலைக்கு காரணமாக இருந்த சிலம்பரசனை போலீஸார் கைது செய்தனர்.

<div class="paragraphs"><p>புவனேஸ்​வரி, சிலம்​பரசன்</p></div>
மார்ச் முதல் ஊதிய உயர்வு வழங்க அரசு உறுதி: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in