

கோப்புப் படம்
சென்னை: வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் நேற்றுமுன்தினம் வேப்பேரி ஜோதி வெங்கடாசலம் தெரு, பிரதாபெட் சாலை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மெத்தம்பெட்டமைன், போதை ஸ்டாம்புகள், போதை மாத்திரைகள் இருந்தது தெரிந்தது.
அதை பறிமுதல் செய்த போலீஸார், காரில் பெங்களூருவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த நொளம்
பூரை சேர்ந்த சங்கீதா (40), மணலியை சேர்ந்த கார் ஓட்டுநர் சிரஞ்சீவி (29), முகலிவாக்கத்தை சேர்ந்த ஜான் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.