பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற சிறுமியின் திருமணம்: சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்

பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற சிறுமியின் திருமணம்: சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்
Updated on
1 min read

திருமுடிவாக்கம்: குன்​றத்​தூரை அடுத்த திரு​முடி​வாக்​கத்​தில் நேற்று பெற்றோர் சம்​மதத்​துடன் நடை​பெற்ற திரு​மணத்​தில் மணப்​பெண் 17 வயதே ஆன சிறுமி என்​ப​தால் அவரை மீட்டு சமூக நலத்​துறை அதி​காரி​கள் காப்​பகத்​தில் ஒப்​படைத்​தனர்.

திரு​முடி​வாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பெற்றோர் சம்​மதத்​துடன் நேற்று பழந்​தண்​டலத்​தில் உள்ள வீட்டில் திரு​மணம் நடை​பெற்​ற​தாக காஞ்​சிபுரம் மாவட்ட குழந்​தைகள் நல அமைப்பு அலு​வலர் அமு​தாவுக்கு தகவல் கிடைத்​தது.

அவர், இது குறித்து படப்​பையைச் சேர்ந்த சமூக நலத்​துறை அதி​காரி செல்விக்கு தகவல் தெரி​வித்​தார். உடனடி​யாக அதி​காரி செல்​வி, தமது குழு​வினருடன் நேற்று நள்​ளிரவு பழந்​தண்​டலம் சென்​று, அங்கு திரு​மணம் செய்த இளைஞருடன் இருந்த சிறுமியை மீட்​டு, காஞ்​சிபுரத்​தில் உள்ள காப்​பகத்​தில் ஒப்​படைத்​தார்.

அவர் சிறுமி என்று தெரிந்​தும் திரு​மணம் செய்த பழந்​தண்​டலம், சிக்​னல் ஆபீஸ் ரோடு பகு​தி​யைச் சேர்ந்த இளைஞர் தேவா (22), சிறுமியின் பெற்றோர், இளைஞரின் பெற்றோர் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலி​யுறுத்தி மகளிர் காவல் நிலை​யத்​தில் வழக்​குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அதி​காரி​கள் முடிவு செய்​துள்​ளனர்​.

பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற சிறுமியின் திருமணம்: சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்
இலவச மடிக்கணினி வழங்க பிஎச்டி மாணவர்கள் கோரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in