Published : 04 Apr 2023 07:08 AM
Last Updated : 04 Apr 2023 07:08 AM

சென்னை | இளைஞர் கொலை வழக்கில் தலைமறைவான 3 பேர் கைது

அலெக்சாண்டர், ஹரிஹரன், விக்னேஷ்

சென்னை: வில்லிவாக்கத்தில் இளைஞர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வில்லிவாக்கம் மூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30).

தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தார். இவர், வில்லிவாக்கம் திருமலை நகரில் உள்ள வேறு ஒரு வீட்டுக்கு மாறி செல்ல திட்டமிட்டார். இதற்காக, கடந்த 1-ம் தேதி இரவு வீட்டில் இருந்த பொருட்களை வாகனம் ஒன்றில் ஏற்றினார்.

பொருட்கள் அனைத்தையும் அனுப்பி வைத்துவிட்டு மணிகண்டன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் மணிகண்டனை வழிமறித்து தகராறு செய்ததோடு, மது குடிக்கபணம் தரவேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதில், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த 6 பேரும் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். கல்லாலும் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். இதில்,பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் 3 பேருக்கு வலை: இதுகுறித்து ஐ.சி.எப். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி,தலைமறைவாக இருந்த வில்லிவாக்கம் ஹரிஹரன் (24), ஐசிஎப் விக்னேஷ் (24), அலெக்ஸாண்டர் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x