Last Updated : 28 Feb, 2023 12:00 PM

3  

Published : 28 Feb 2023 12:00 PM
Last Updated : 28 Feb 2023 12:00 PM

மதுரையில் பரபரப்பு: தேடப்பட்ட ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸார்

மதுரை: உத்தங்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன் பாலமுருகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். அவர் மாட்டுத்தாவணி பகுதியில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீஸார் அவரை சுற்றி வளைத்தனர், அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது, வினோத், தன்னிடம் இருந்த அரிவாளால் போலீஸாரை தாக்க முயன்றார்.

இதனையடுத்து போலீஸார் தற்காப்புக்காக , வினோத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட வினோத் ரவுடி பட்டியலில் இடம் பெற்று இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x