Published : 31 Jan 2023 03:31 AM
Last Updated : 31 Jan 2023 03:31 AM

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை - ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகரை சேர்ந்தவர் உதயகுமார்(38). இவரது மனைவி பிரேம சுந்தரி(31). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். உதயகுமார் தனியார் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் பணியாற்றி வந்தார். உதயகுமார் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 1.06.2016 அன்று கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பிரேமசுந்தரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி உதயகுமார் தீ வைத்தார்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பகவதியம்மாள் மனைவியை தீ வைத்து கொலை செய்த உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x