Published : 25 Jan 2023 05:51 AM
Last Updated : 25 Jan 2023 05:51 AM

சவுகார்பேட்டையில் ரூ.7 கோடி நகை பறிமுதல்: ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த இருவரிடம் விசாரணை

சவுகார்பேட்டையில் மகாராஷ்டிர நகை வியாபாரிகளிடமிருந்து ரூ.7 கோடி மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் ஒரு பகுதி..

சென்னை: சவுகார்பேட்டையில் ஆவணம் ஏதுமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

யானைகவுனி போலீஸார் நேற்று முன்தினம் மதியம் சவுகார்பேட்டை, ஆதியப்பா தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த இருவர் வைத்திருந்த பைகளை சோதனையிட்டதில், அதில் ரூ.7 கோடியே 38 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து இருவரிடமும் போலீஸார் விசாரித்ததில் அவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த நகை வியாபாரிகள் முகேஷ் பவர்லால் ஜெயின் (49), சிக்கந்தர் சாந்தாராம் ஷிக்வான் (39) என்பதும், இருவரும் நகைகளை விற்க சென்னை வந்ததும் தெரியவந்தது. ஆனால், அவர்களிடம் தங்க நகைகளுக்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x