Published : 21 Jan 2023 06:17 AM
Last Updated : 21 Jan 2023 06:17 AM

திருநெல்வேலி | மக்களுக்கு இடையூறாக பிறந்த நாள் கொண்டாடிய 6 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாமிரபரணி ஆற்றுப் பாலம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு நேரத்தில் திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த மணிகண்டன் (20) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் கூட்டமாக கூடி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது தொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் மணிகண்டன், மானூர் மாதவக்குறிச்சி லட்சுமணபெருமாள் (21), சுத்தமல்லி கிருஷ்ணகுமார் (23), திருநெல்வேலி டவுன் கணபதி என்ற மணி (19), மணிகண்டன் (21), சேரன்மகாதேவி ஜோஸ் (21) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x