Published : 22 Jun 2022 06:12 AM
Last Updated : 22 Jun 2022 06:12 AM

விழுப்புரம் | பெண் எஸ்.பிக்கு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: கடந்த 2021-ம் ஆண்டில் அப் போதைய முதல்வர் பழனிசாமியின் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த போது, தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபி தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்தார்.

புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, இருவர் மீதும் விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை கடந்த 10 மாதங்களாக விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த முறை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சிகளான காவல்துறை எஸ்பிக்கள் மகேஸ்வரன், சக்தி கணேசன் மற்றும் ஆய்வாளர் விதுன்குமார் உள்ளிட்ட 3 பேரை நேரில் ஆஜராக நடுவர் மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் அரசு தரப்பு சாட்சிகளான சென்னை மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறை எஸ்பி மகேஸ்வரன், கடலூர் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசன், திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஆய்வாளர் விதுன்குமார் உள்ளிட்டோர் நேரில் ஆஜரானார்கள்.

இதனையடுத்து எஸ்,பிக்கள் மகேஸ்வரன், சக்தி கணேசன், ஆய்வாளர் விதுன்குமார் ஆகி யோரிடம் நடுவர் புஷ்பராணி விசாரணை நடத்தி அவர்கள் அளித்த சாட்சியங்களை பதிவு செய்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அரசு தரப்பின் 2-வது சாட்சியான புகார் தெரிவித்த பெண் எஸ்.பியின் கணவரிடம் தாங்கள் குறுக்கு விசாரணை நடத்தி முடித்த பிறகே மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இம்மனு மீதான உத்தரவை வரும் 27-ம் தேதிக்கு வழங்குவதாகவும், வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தும், அன்றைய தினம் அரசு தரப்பு சாட்சியான கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி ஜியாவுல் ஹக் நேரில் ஆஜராகவும் உத்தர விட்டுநடுவர் புஷ்பராணி வழக்கு விசார ணையை ஒத்தி வைத்தார்.

இவ்வழக்கின் விசாரணை கடந்த 10 மாதங்களாக விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x