Published : 25 May 2022 06:41 AM
Last Updated : 25 May 2022 06:41 AM

செக்கானூரணியில் தந்தை கொலை: மகனை தேடி வரும் போலீஸார்

மதுரை: தந்தை கொலையான சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது மகனை போலீஸார் தேடுகின்றனர்.

மதுரை மாவட்டம் செக்கா னூரணியைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் (65). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

மகள் சுபா சென்னையில் வசிக்கிறார். ராமகிருஷ்ணன் மனநிலை பாதித்த மகன் காசி பிரபுவுடன் வசித்து வந்தார்.

காசிபிரபு அவ்வப்போது வெளியே சென்றுவிடுவார். ராமகிருஷ்ணனுக்கு அவரது சகோதரி தனலட்சுமி உணவு கொடுத்து வந்தார். மே 23-ம் தேதி இரவு உணவு கொடுக்கச் சென்றபோது, ராமகிருஷ்ணன் தலையில் அடிபட்டு இறந்து கிடந் தார். தகவல் அறிந்த செக்கானூரணி போலீஸார் உடலை மீட்டு விசாரித்தனர்.

அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

ராமகிருஷ்ணனுக்கும், அவரது மகனுக்கும் அடிக்கடி தகராறு இருந்த நிலையில் தந்தையை மகன் கொன்றிருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது. அவரைப் பிடித்தால் உண்மை தெரியவரும் என்பதால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x