Published : 25 May 2022 07:20 AM
Last Updated : 25 May 2022 07:20 AM

புதுக்கோட்டை | சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பாரதி நகரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் பார்த்திபன்(33). கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் வெங்கடேசன்(23). கட்டிடத் தொழிலாளிகளான இருவரும், கடந்த ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தற்போது அந்த சிறுமிக்கு 8 மாதத்தில் குழந்தை உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர், பார்த்திபன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சத்யா நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட பார்த்திபன், வெங்கடேசன் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.70 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x