Published : 23 May 2022 06:23 AM
Last Updated : 23 May 2022 06:23 AM
கோவை: கோவை உக்கடம் லாரிப்பேட்டை அருகே நேற்று அதிகாலை உக்கடம் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறிய ரக சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். வேனில், மூட்டை மூட்டையாக ஒரு டன் அளவுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சரக்கு வேனுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றைக் கடத்தி வந்த கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ஆஷிக் (25), மொய்தீன் (28), காரமடையை சேர்ந்த தேவேந்திரன் (50) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT