Published : 20 May 2022 06:13 AM
Last Updated : 20 May 2022 06:13 AM

போதை மாத்திரை வாங்கித் தராததால் தகராறு: சென்னையில் இளைஞரைக் கொன்றதாக 3 பேர் கைது

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ராகுல்(19). இவரது சடலம் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள பழைய கிளாஸ் பேக்டரி சாலையில் கிடந்தது. யாரோ அவரைக் கொலை செய்திருந்ததும் தெரியவந்தது.

தகவலறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீஸார் ராகுல் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகரைச் சேர்ந்தசங்கர் (எ) கவுரி சங்கர்(25), தண்டையார்பேட்டை கைலாசமுதலி தெருவைச் சேர்ந்த சரவணன் (20), கொருக்குப்பேட்டை பென்சில்பேக்டரி பகுதியைச் சேர்ந்த ரகுமான் (20) ஆகியோர் இக்கொலை வழக்குத் தொடர்பாக போலீஸாரிடம் சரணடைந்தனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்தபோலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்ட 3 பேரும் போதை மாத்திரைக்காக ராகுலிடம் ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளனர். ஆனால், ராகுல் போதைமாத்திரைகளை வாங்கித் தராமல், ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் ராகுலை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x