Published : 19 May 2022 06:28 AM
Last Updated : 19 May 2022 06:28 AM

சிறுமுகை அருகே தலைமைக் காவலர் தற்கொலை

கோவை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவைச் சேர்ந்தவர் தாமோதரன்(41). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். காரமடை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிய தாமோதரன், சிறுமுகை அருகேயுள்ள ஜடையம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த மார்ச் 10-ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி தகராறு ஏற்பட்டதில் தாமோதரனின் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான விருதுநகருக்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த தாமோதரன், கடந்த 16-ம் தேதி ஜடையம்பாளையத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்தது நேற்று தான் தெரியவந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற சிறுமுகை போலீஸார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x