Published : 18 May 2022 08:17 AM
Last Updated : 18 May 2022 08:17 AM

அரியலூர் | பாலியல் வழக்கில் இளைஞருக்கு 35 ஆண்டு சிறை

அரியலூர்/கரூர்: அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜதுரை(21). கார் ஓட்டுநரான இவருக்கு பிளஸ் 2 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 9.3.21 அன்று அந்த மாணவியை ராஜதுரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இவ்வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், ராஜதுரைக்கு மாணவியை கடத்திச் சென்ற குற்றத்துக்கு 10 ஆண்டுகள், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த சிறை தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டம் கொசூர் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் கணேசன்(28), முனியப்பன்(23). இவர்கள் இருவரும் 2020-ல் மனநலம் பாதிக்கப்பட்ட 23 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.நசீமாபானு, பெண்ணை கடத்திய குற்றத்துக்காக இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைதண்டனை, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காங்காவல் சிறை தண்டனையும் விதித்து, இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x