Last Updated : 08 Apr, 2022 05:24 PM

 

Published : 08 Apr 2022 05:24 PM
Last Updated : 08 Apr 2022 05:24 PM

'வில்லியனூரில் தலையில் பாறாங்கல்லை போட்டு முதியவர் படுகாலை' - புதுச்சேரி போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அருகே பிரியாணி கடை முன்பு முதியவர் ஒருவர் தலை நசுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர் பைபாஸ் சாலை, ஆரியப்பாளையம் சந்திப்பை ஒட்டியுள்ள பிரியாணி கடை முன்பு 60 வயது முதியவர் தலை நசுக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்துள்ளார் வில்லியனூர் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்பி தீபிகா, எஸ்பி ஜிந்தா கோதண்டராமன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், ராமு மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாறாங்கல்லை தலையில் போட்டு முதியவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அவரது அருகில் கிடந்த பாறாங்கல் மற்றும் காலணிகள் ஆகியவற்றையும் போலீஸார் கைபற்றினர். பின்னர் இறந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு குறித்து விசாரிக்க 2 தடைப்படை குழுக்க அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கம்பக்கத்திரிடம் காவல்துறையினர் விசாரித்ததில், இறந்த முதியவர் அப்பகுதியில் சில நாட்களாக பிளாட்பாரத்தில் தங்கி பிச்சை எடுத்து வந்ததும், நேற்று முன்தினம் ஆரியப்பாளையம் 4 முனை சந்திப்பில் அவரை சிலர் பார்த்ததும் தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நாட்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிககளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x