Published : 21 Feb 2022 03:06 PM
Last Updated : 21 Feb 2022 03:06 PM

திருப்பூர்: பெண்ணிடம் தொலைபேசியில் ஆபாசப் பேச்சு; போலீஸுக்கு பொதுமக்கள் அடி

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ம் அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் பெண்ணை அலைபேசியில் தனிமைக்கு அழைத்த காவலருக்கு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தர்ம அடி கொடுத்தனர்.

அவிநாசி அருகே வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இந்நிலையில் இவரது மகள் தனது காதலருடன் சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த காவலர் சுப்பிரமணி (38) சாலையோரம் நின்றிருந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு, அவரது தொலைபேசி எண்ணையும் பெற்றுச் சென்றுள்ளார்.

பிறகு பெண்ணின் தொலைபேசிக்கு அழைத்த காவலர் சுப்பிரமணி, அவரை தனியாக வருமாறு கூறியள்ளார். இதையறிந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள், காவலர் கூறிய இடத்திற்கு வரவழைத்து, அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவலர் சுப்பிரமணி திருப்பூர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x