சென்னை | அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

திவ்ய தர்ஷினி, குமார், சசிகலா

திவ்ய தர்ஷினி, குமார், சசிகலா

Updated on
1 min read

சென்னை: அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி செவிலியர் உள்​ளிட்ட பலரிடம் சுமார் ரூ.20 லட்​சம் மோசடி செய்த ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை பழைய வண்​ணாரப்​பேட்டை போஜ​ராஜன் நகரைச் சேர்ந்த சித்ரா (28), தனி​யார் மருத்​து​வ​மனை​யில் செவிலிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த ஆண்டு டிசம்​பர் மாதம், சென்னை சேத்​துப்​பட்டு மங்​களாபுரத்​தைச் சேர்ந்த சசிகலா (40) என்​பவர் சிகிச்​சைக்​காக அந்த மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அப்​போது சித்​ரா​விடம் அறி​முக​மான சசிகலா, தனக்கு அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் செல்​வாக்கு இருப்​ப​தாக​வும், பணம் கொடுத்​தால் அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாக​வும் ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார்.

சசிகலா​வின் பேச்சை நம்​பிய சித்​ரா, பல தவணை​களாக ரூ.8 லட்​சம் கொடுத்​துள்​ளார். மேலும், தனது நண்​பர்​களான சக்தி பாலனுக்கு சுகா​தா​ரத் துறை ஆய்​வாளர் வேலை​யும், கீதாவுக்கு சத்​துணவுத் துறை​யில் வேலை​யும் பெற்​றுத் தரு​மாறு கோரி, அவர்​களை​யும் சசிகலா​விடம் அறி​முகம் செய்​துள்​ளார்.

இதற்​காக சக்தி பாலனிடம் ரூ. 9 லட்​ச​மும், கீதா​விடம் ரூ. 3 லட்​சம் என மொத்​தம் ரூ.20 லட்​சத்தை சசிகலா வாங்​கிய​தாகத் தெரி​கிறது.

தேர்​தல் முடிந்​ததும் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி காலம் கடத்​திய சசிகலா, அதன் பிறகு சித்​ரா​வின் அழைப்​பு​களைத் தவிர்க்​கத் தொடங்​கி​னார்.

சந்​தேகமடைந்த சித்​ரா, சசிகலா​வின் வீட்​டுக்கு நேரில் சென்று பணத்​தைத் திரும்​பக் கேட்​டுள்​ளார். அப்​போது சசிகலா, “பணத்​தைத் தர முடி​யாது, மீறி கேட்​டால் கூலிப்​படையை வைத்து உன்​னைக் கொன்று விடு​வேன்” என மிரட்​டல் விடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, பாதிக்​கப்​பட்ட சித்​ரா, சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தார். இது குறித்து வழக்​குப் பதிவு செய்த வண்​ணாரப்​பேட்டை போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

சசிகலா​, அவருக்கு உடந்தை​யாக கணவர் குமார் (43) மற்​றும் குமாரின் தங்கை திவ்​யதர்​ஷினி (22) ஆகியோரை போலீ​ஸார் நேற்று முன்தினம் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில், சசிகலா​வும், திவ்​யதர்​ஷினி​யும் ஒரு வழக்​கறிஞரிடம் உதவி​யாளர்​களாகப் பணி​யாற்றி வந்​ததும், குமார் உணவு டெலிவரி ஊழிய​ராக இருந்​ததும் தெரிய​வந்​தது.

<div class="paragraphs"><p>திவ்ய தர்ஷினி,&nbsp;குமார்,&nbsp;சசிகலா</p></div>
சென்னையில் 130 ஏசி பேருந்து உட்பட 250 பேருந்துகள்: முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in