Published : 24 Apr 2025 06:23 AM
Last Updated : 24 Apr 2025 06:23 AM

சென்னை | மறைந்த வாடிக்கையாளர்களின் பணம் கையாடல்: வங்கி கிளை மேலாளர், எழுத்தர் கைது

சுந்​தர் மோகன் மாஜி, ஜெய்​சிங்

சென்னை: மறைந்த வாடிக்​கை​யாளர்​களின் பணம் உட்பட வங்​கி​யில் இருந்து ரூ.23.48 லட்​சம் மோசடி செய்​த​தாக கிளை மேலா​ளர், எழுத்​தர் கைது செய்​யப்​பட்​டனர். இந்​தி​யன் வங்​கி​யின் சென்னை தெற்கு மண்டல மேலா​ளர் சத்​ய​நா​ராயணா, சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் கடந்த 8-ம் தேதி ஒரு புகார் கொடுத்​தார்.

அதில் அவர் கூறி​யிருந்​த​தாவது: இந்​தி​யன் வங்​கி​யின் சாந்​தோம் கிளை மேலா​ள​ராக இருந்த வேளச்​சேரியை சேர்ந்த சுந்​தர் மோகன் மாஜி (47), வங்கி எழுத்​த​ராக (கிளார்க்) இருந்த மயி​லாப்​பூர் பஜார் ரோடு பகு​தியை சேர்ந்த ஜெய்​சிங் (57) ஆகிய இரு​வரும் வாடிக்​கை​யாளர்​களின் பணத்தை அவர்​களுக்கு தெரி​யாமலேயே அவர்​களது கையெழுத்தை போலி​யாக போட்டு எடுத்​தும், மறைந்த வாடிக்​கை​யாளர்​களின் வங்கி கணக்​கில் உள்ள பணத்தை கையாடல் செய்​தும், வாடிக்​கை​யாளர்​களின் அனு​மதி இன்று வங்கி கடன் பெறு​தல் உட்பட பல்​வேறு வகை​களில் வாடிக்​கை​யாளர்​களின் பணம் ரூ.23.48 லட்​சத்தை கையாடல் மற்​றும் மோசடி செய்​துள்​ளனர். அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு புகாரில் கூறி​யிருந்​தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார். அதன்​படி, மத்​திய குற்​றப்​பிரிவு கூடு​தல் காவல் ஆணை​யர் ராதிகா தலை​மையி​லான வங்கி மோசடி புல​னாய்வு பிரிவு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரித்​தனர். புகார் உண்மை என தெரிய​வந்​ததை அடுத்​து, சுந்​தர் மோகன் மாஜி, ஜெய்​சிங் ஆகிய 2 பேரும் நேற்று கைது செய்​யப்​பட்​டனர். பின்னர் நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்​கப்​பபட்​டனர். தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x