நெல்லை அருகே அரசுப் பேருந்து - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் பலி

நெல்லை அருகே அரசுப் பேருந்து - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் பலி
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி - கன்னியாகுமாரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மூன்றடைப்பு அருகே அரசுப் பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் நாங்குநேரி அருகே உள்ள படலையார் குளம் ஜே ஜே நகரைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி மகேஷ்( 20) , முதலைக்குளம் செல்வராஜ் மகன் உசிலவேல் (36) என அடையாளம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மூன்றடைப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in