சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை 

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கையில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை வேலுநாச்சியார் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் நிதிஷ் (24). திருப்பூரில் பணிபுரிந்து வந்த இவர், சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் ஞாயிறு இரவு தனது வீட்டின் அருகேயுள்ள பெட்டிக்கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் நிதிஷை அரிவாளால் வெட்டியுள்ளது.இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in