Published : 01 May 2024 10:29 AM
Last Updated : 01 May 2024 10:29 AM

சத்தியமங்கலம் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

விபத்தில் சிக்கிய முருகன் குடும்பத்தினர் பயன்படுத்திய கார்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (35). கொசுவலை வியாபாரி. இவர் தனது மனைவி ரஞ்சிதா (30), மகன் அபிஷேக் (8), மகள் நித்திஷா (7) ஆகியோருடன் கரூர் சென்று விட்டு, நேற்று இரவு, காரில் சிறுமுகை திரும்பியுள்ளார்.

சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில், நெசவாளர் காலனி அருகே கார் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு கார் மீதி மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த முருகன், ரஞ்சிதா, அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நித்திஷா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முருகன் வந்த கார் மீது மோதிய மற்றொரு காரில் வந்த கல்லூரி மாணவர்களான சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மோகன் (21), சேலத்தை சேர்ந்த சுஜித் (21) திருப்பூரைச் சேர்ந்த விஷால் பத்ரி (21) மற்றும் கார் ஓட்டுநர் ஓசூரைச் சேர்ந்த அக்சரா (21) ஆகிய நான்கு பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x