Last Updated : 08 Jul, 2023 03:45 AM

2  

Published : 08 Jul 2023 03:45 AM
Last Updated : 08 Jul 2023 03:45 AM

மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்

மதுரை: மதுரை- நத்தம் மேம்பாலத்தில் விபத்தில் சைக்கிள் டூவீலரில் சென்ற 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை தல்லாகுளம் மூக்கப்பபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ஸ்ரீனிவாசன் பாபு (22). வடக்குமாசி வீதி இருளப்ப கோனார் சந்து பகுதியைச் சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன். இவரது மகன் ஆனந்த கிருஷ்ணன் (22). நண்பர்களான இருவரும் நேற்று (ஜூலை 7ம் தேதி) இருசக்கர வாகனத்தில் அழகர் கோயில் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இதன்பின், ஊமச்சிகுளம் பகுதியில் நத்தம் பறக்கும் பாலம் வழியாக வீடு திரும்பினர். ஆனந்த கிருஷ்ணன் டூவீலரை ஓட்டியுள்ளார். மேம்பாலத்தில் வேகமாக வந்த நிலையில், பிடிஆர் சிலை அருகே மேம்பாலத்தின் வளைவில் திரும்பியுள்ளனர். அப்போது, திடீரென ஆனந்த கிருஷ்ணனின் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் பக்கவாட்டு சுவர் அருகில் இருந்த சிக்னல் கம்பத்தில் மோதியது.

அதேவேகத்தில் ஆனந்த கிருஷ்ணன் பாலத்திற்கு கீழும், ஸ்ரீனிவாசன் பாபு பாலத்திற்கு மேல் பகுதியிலும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் இருவரின் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவ இடத்தை துணை காவல் ஆணையர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேம்பாலம் திறந்து பயன்பாட்டு வந்த நிலையில், இருவர் உயிரிழந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x