Published : 03 Aug 2022 08:27 PM
Last Updated : 03 Aug 2022 08:27 PM

தமிழகத்தில் புதிதாக 1,288 பேருக்கு கரோனா; ஒருவர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 778, பெண்கள் 510 என மொத்தம் 1,288 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 283 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 48,195 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 98,770 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,691 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 11,392 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு விவரம்: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவருக்கு கடந்த 29-ம் தேதி கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் 1-ம் தேதி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் இருந்த நிலையில், இன்று அதிகாலை 12.45 மணி அளவில் கரோனா மற்றும் சுவாச்சக்கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 1,302 ஆகவும், சென்னையில் 298 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 17,135 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 1,37,057 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

19,823 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 204.84 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x